உள்ளூர் செய்திகள்

பட்டதாரி பெண் மாயம்

Published On 2023-07-21 10:01 GMT   |   Update On 2023-07-21 10:01 GMT
  • கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்து நிஷா வெளியே சென்றார்.
  • மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை.

தருமபுரி, ஜூலை.21-

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கோட்டப்பட்டியை அடுத்த சிக்கலூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் நிஷா (வயது21). இவர் பி.எஸ்.சி. வரை படித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்து நிஷா வெளியே சென்றார்.

ஆனால், மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ஆறுமுகம் கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான நிஷாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News