உள்ளூர் செய்திகள்

பிரதமர் மோடி உரையை கேட்ட கவர்னர் ஆர்.என்.ரவி

Published On 2023-04-30 08:55 GMT   |   Update On 2023-04-30 08:55 GMT
  • கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் பிரம்மாண்ட சிறப்பு எல்.இ.டி திரையில் பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
  • பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி தமிழில் ஒலிபரப்பப்பட்டது.

சென்னை:

சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பு நடந்தது. கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் இதற்காக பிரம்மாண்ட சிறப்பு எல்.இ.டி திரையில் பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி தமிழில் ஒலிபரப்பப்பட்டது. இதில் முக்கிய பிரமுகர்கள், முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் போலீஸ் அதிகாரி நடராஜ், ஐசரி கணேஷ், உள்பட 150க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News