கவர்னர் ஆர்.என். ரவி இன்று சிதம்பரம் வருகிறார்: உலக யோகா தின விழாவில் பங்கேற்பு
- தம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உலக யோகா தின விழா நாளை நடைபெற உள்ளது.
- வள்ளலார் வாழ்ந்த கருங்குழி கிராமத்துக்கு சென்று அவரது வீட்டை பார்வையிடுகிறார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உலக யோகா தின விழா நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சென்னையிலிருந்து புதுச்சேரி வழியாக காரில் இன்று இரவு 7.30 மணிக்கு சிதம்பரம் வருகிறார். இன்று இரவு அண்ணாமலை பல்கலைக் கழ க விருந்தினர் விடுதியில் தங்குகிறார். நாளை (புதன்கிழமை) பல்கலைக் கழக விளையாட்டு மைதா னத்தில் நடைபெறும் உலக யோகா தின விழாவில் கவர்னர் ஆர்.என். ரவி பங்கேற்கிறார்.
நாளை மதியம் 3.30 மணியளவில் அங்கிருந்து காரில் புறப்பட்டு வள்ளலார் பிறந்த இடமான மருதூர் செல்கிறார். அதனை தொடர்ந்து வள்ளலார் வாழ்ந்த கருங்குழி கிராமத்துக்கு சென்று அவரது வீட்டை பார்வையிடுகிறார். இதனை தொடர்ந்து வடலூரில அநை்துள்ள வள்ளலாரின் சத்திய ஞான சபைக்கு சென்று வழிபடுகிறார். பின்னர் சென்னை புறப்பட்டு செல்கிறார்.