உள்ளூர் செய்திகள்
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கோபூஜை வழிபாடு நடந்தது.
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கோபூஜை வழிபாடு
- கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- பக்தர்கள் பசுமாட்டிற்கு வாழை பழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வழிபட்டனர்.
சீர்காழி:
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.
இந்த கோயிலில் ஆனி மாத பிறப்பையொட்டி சிறப்பு கோபூஜை வழிபாடு நடந்தது.
முன்னதாக கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், மகா தீபாரனை காட்டப்பட்டது.
தொடர்ந்து கோ சாலையி லிருந்து வரவழைக்கப்பட்ட புங்கனூர் குட்டை பசு மாட்டிற்கு சிறப்பு வழிபாடு செய்து தீபாராதனை காட்டி கோபூஜை வழிபாடு நடை பெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பசுமாட்டிற்கு வாழை பழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வலம் வந்து வணங்கி வழிபட்டனர்.