உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

நிலக்கோட்டை அருகே மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு

Published On 2023-10-06 05:05 GMT   |   Update On 2023-10-06 05:05 GMT
  • மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மூதாட்டி கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து சென்றனர்.
  • புகாரின் பேரில் போலீசார் மூதாட்டியிடம் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி சேர்ந்த டேவிட் மனைவி சேவியர் அஞ்சல்மேரி (வயது 60). இவர் தனது 2 வது மகள் வீட்டிற்கு சென்று விட்டு நிலக்கோட்டை- மதுரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜிடம் கொடுத்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து மூதாட்டியிடம் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News