உள்ளூர் செய்திகள்

குடும்பத்துடன் கோயிலுக்கு சென்ற வியாபாரி வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை

Published On 2023-04-24 09:50 GMT   |   Update On 2023-04-24 09:50 GMT
  • குடும்பத்துடன் ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோயிலுக்கு சென்றார்.
  • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

சேலம்:

சேலம் செவ்வாய்பேட்டை தொட்டு சந்திரையர் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 53) வெள்ளி வியா பாரியான இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோயிலுக்கு சென்றார். பின்னர் அங்கி ருந்து வரும் வழியில் திருப்பதி கோயிலில் தரிச னம் செய்து விட்டு நேற்று காலை சேலம் திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்க ரன் மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிகள் சிதறிக் கிடந்தன். அதில் இருந்த 3 பவுன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி ஆகியவை திருடு போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.3.5 லட்சமாகும். இதுபற்றி பாஸ்கரன் செவ்வாய் பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் உதவிகமிஷனர் வெங்கடே சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வீடு பூடடிக்கிடந்ததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமி ராக்களை ஆய்வு செய்து வருவதுடன் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News