உள்ளூர் செய்திகள்

ஊட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் போக்சோவில் கைது

Published On 2022-11-26 09:07 GMT   |   Update On 2022-11-26 09:07 GMT
  • 8 வயது சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார்.
  • சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து விட்டு, தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

ஊட்டி,

ஊட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது சிறுமி வீட்டின் அருகே வசிக்கும் அஜித்குமார்(21) என்ற வாலிபர், சிறுமியிடம் சென்று நைசாக பேச்சு கொடுத்தார்.

சிறுமியிடம், சாக்லெட் வாங்கி தருவதாக கூறி அருகே உள்ள கடைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து விட்டு, தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

அங்கு வீட்டில் யாரும் இல்லாததால் சிறுமிக்கு, அஜித்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இந்த விஷயத்தை வெளியில் கூறினால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டலும் விடுத்தார்.

இதனால் அதிர்ச்சியான சிறுமி அவரிடம் இருந்து தப்பித்து தனது வீட்டிற்கு அழுது கொண்டே சென்றார். சிறுமியிடம் அவர் தாயார் விசாரித்தார்.

அப்போது சிறுமி தனக்கு நடந்தசம்பவங்களை பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர்கள் ஊட்டி புதுமந்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அஜித்குமார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

இதையடுத்து போலீசார் அஜித்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News