உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி படுகாயம்

Published On 2023-02-09 15:35 IST   |   Update On 2023-02-09 15:35:00 IST
சாதனா (வயது 5). இன்று காலை இவரை இவரது தாத்தா பள்ளிக்கு அழைத்து சென்றார்

கடலூர்:

சிதம்பரம் அடுத்த அம்மாபேட்டை வசிப்பவர் வேலுச்சாமி, இவரது மகள் சாதனா (வயது 5). இன்று காலை இவரை இவரது தாத்தா பள்ளிக்கு அழைத்து சென்றார். அப்போது சீர்காழி - புறவழிச்சாலையை கடக்க முயற்சித்தனர். அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் சாதனா மீது மோதிவிட்டார். மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் தப்பிவிட்டார்.

அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சாதனாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News