உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

அரசு ஆசிரியர்கள், காப்பாளர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு

Published On 2023-09-11 10:34 IST   |   Update On 2023-09-11 10:34:00 IST
  • மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு கள்ளர் பள்ளி கள் மற்றும் விடுதிகளில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வருகிற 26 மற்றும் 27 ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது.
  • முன்னுரிமையில் உள்ளவர்கள் உரிய விண்ணப்பத்துடன் தக்க சான்றுகளை இணைத்து வருகிற 13 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

திண்டுக்கல்:

மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலக நிர்வாகத்தின் கீழ் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு கள்ளர் பள்ளி கள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்று நர்கள், காப்பாளர், காப்பாளினிகளுக்கு 2023-2024 ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வருகிற 26 மற்றும் 27 ந் தேதி ஆகிய 2 நாட்கள் மதுரை மாவட்டம், முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

26ந் தேதி காலை 10.30 மணி முதல் மேல்நிலை ப்பள்ளித் தலைமையாசிரி யர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு, உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு, நடுநிலை ப்பள்ளித் தலைமையாசிரி யர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு, தமிழாசிரியர் மாறுதல், பட்டதாரி ஆசிரி யர், கணினி பயிற்றுநர், காப்பாளர், காப்பாளினி மாறுதல் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான மாறு தல் கலந்தாய்வு நடைபெற வுள்து.

27ந் தேதி காலை 10.30 மணி முதல் தொடக்க ப்பள்ளித் தலைமையாசிரி யர் மாறுதல் மற்றும் பதவி உயர்வும், உதவித் தொடக்க கல்வி அலுவலர் மற்றும் சரக மேற்பார்வை யாள ர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு இடைநிலை ஆசிரியர் (1 முதல் 5ஆம் வகுப்பு) இடைநிலைக் காப்பாளர், காப்பாளினி மாறுதலும் நடைபெற உள்ளது.

எனவே, முன்னுரிமையில் உள்ளவர்கள் உரிய விண்ணப்பத்துடன் தக்க சான்றுகளை இணைத்து வருகிற 13 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் இணை இயக்குநர் கள்ளர் சீரமைப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க ப்படும்பட்சத்தில் அதற்குரிய முன்னுரிமை வழங்கப்படும். அதற்குப் பின்னர் வரும் மனுக்கள் பரிசீலனைக்கு ஏற்று க்கொள்ள இயலாது என இணை இயக்குநர் பொன்.குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News