உள்ளூர் செய்திகள்
முகாமில் கலந்து கொண்டவர்கள்.
- நத்தம் அருகே குடகிப்பட்டி ஊராட்சி மந்தகுளத்துபட்டியில் பெண்களுக்கான சமத்துவ பயிற்சி முகாம் நடந்தது.
- இதில் அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
நத்தம்:
நத்தம் அருகே குடகிப்பட்டி ஊராட்சி மந்தகுளத்துபட்டியில் பெண்களுக்கான சமத்துவ பயிற்சி முகாம் நடந்தது. இதற்கு சீட்ஸ் அறக்கட்டளை இயக்குநர் பிரியா தலைமை தாங்கினார்.மாலை நேர பள்ளி ஆசிரியை முருகேஸ்வரி முன்னிலை வகித்தார்.
இதில் வக்கீல் நாகநந்தினி கலந்துகொண்டு பாலின சமத்துவதிற்கான மகளிர் உரிமைகள் குறித்து எடுத்துரைத்தார். இதில் அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். தேவாங்கு பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாண்டி நன்றி கூறினார்.