உள்ளூர் செய்திகள்

கியாஸ் குடோனுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

கியாஸ் குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைப்பு

Published On 2022-09-30 07:08 GMT   |   Update On 2022-09-30 07:08 GMT
  • குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், அவரது மகள் சந்தியா, மற்றும் ஆமோத்குமார் ஆகியோர் பலியானார்கள்.
  • வட்டாட்சியர் லோகநாதன் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் இன்று அதிகாலை கியாஸ் குடோனுக்கு வந்து ஆய்வு செய்தனர்.

காஞ்சிபுரம்:

ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கத்தில் உள்ள கியாஸ்குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உடல் கருகினர். இதில் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், அவரது மகள் சந்தியா, மற்றும் ஆமோத்குமார் ஆகியோர் பலியானார்கள். மேலும் 9 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று இரவு கியாஸ் ஏஜென்சி அலுவலர்கள் முன்னிலையில் குடோனில் இருந்த அனைத்து சிலிண்டர்களும் வெளியே கொண்டு செல்லப்பட்டது. இதில் ஏராளமான கியாஸ் சிலிண்டர்கள் தீயில் கருகி இருந்தன.

இந்த நிலையில் வட்டாட்சியர் லோகநாதன் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் இன்று அதிகாலை கியாஸ் குடோனுக்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் குடோனுக்கு சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த நிறுவனத்தின் கியாஸ் உரிமம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் தீயணைப்பு, வருவாய்த்துறை, தடயவியல் துறை உள்ளிட்ட 5 துறையைச் சேர்ந்த குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News