உள்ளூர் செய்திகள்
- கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தனர்.
- போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
கூடலூர்:
கூடலூர் தெற்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
அப்போது 8-வது வார்டு காந்தி கிராமம் பகுதியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா (வயது 21), கோட்டை மேட்டுத்தெருவைச் சேர்ந்த கோபிநாத் (19) ஆகிய இருவரும் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தனர்.
போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.