உள்ளூர் செய்திகள்

கடலூர் மஞ்சக்குப்பத்தில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் சி.சி.டி.வி.கேமிராக்களை அடித்து நொறுக்கிய கும்பல்

Published On 2023-10-25 08:37 GMT   |   Update On 2023-10-25 08:37 GMT
  • பொது மக்களை புகைப்படமாக எடுத்து எதற்காக வெளியில் நோட்டீஸ் ஆக ஒட்டுகிறீர்கள்? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  • இந்த சம்பவத்தை பொதுமக்கள் எதிர்த்ததோ டு கண்டித்து உள்ளனர்

கடலூர்:

கடலூர் மஞ்சக்குப்பம் தனலட்சுமி நகர் சேர்ந்தவர் அருள் (வயது 63). முன்னாள் ராணுவ வீரர். நேற்று முன்தினம் இரவு அதே பகுதிைய சேர்ந்த ஒரு சிலர் அருள் வீட்டிற்கு நேரில் சென்றனர். பின்னர் வீட்டில் ஏன் அதிகளவில் சி.சி.டி.வி கேமரா வைத்துள்ளீர்கள்? மேலும் சாலையில் செல்லும் பொது மக்களை புகைப்படமாக எடுத்து எதற்காக வெளியில் நோட்டீஸ் ஆக ஒட்டுகிறீர்கள்? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென்று சி.சி.டி.வி.கேமராக்களை அடித்து நொறுக்கினார்கள்.

இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், முன்னாள் ராணுவ வீரரான அருள் தனது வீட்டில் அதிக அளவில் சி.சி.டி.வி. கேமராக்களை வைத்துக் கொண்டு சாலையில் செல்லும் பொது மக்களை கண்காணிப்பதோடு மட்டுமின்றி அவர்களின் புகைப்படத்தை எடுத்து வீட்டிற்கு வெளியில் ஒட்டி வந்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தை பொதுமக்கள் எதிர்த்ததோ டு கண்டித்து உள்ளனர். மேலும் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News