உள்ளூர் செய்திகள்

விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் கலெக்டர் அறிக்கை,

Published On 2022-09-01 10:27 GMT   |   Update On 2022-09-01 10:27 GMT
  • விநாயகா் கோவில் அருகில் ஊா்வலமாக கொண்டு வரப்படும் சிலைகளைக் கரைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
  • குமாரபாளையம் அக்ரஹாரம் கிராமம், பழையபாலம் அண்ணாநகா்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்செங்கோடு வட்டம் எஸ். இறையமங்கலம் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள விநாயகா் கோவில் அருகில் ஊா்வலமாக கொண்டு வரப்படும் சிலைகளைக் கரைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதிக்கு ஓங்காளியம்மன் கோவில் படித்துறை. பாப்பம்பா ளையம் முனியப்பன் கோவில், குமாரபாளையம் அக்ரஹாரம் கிராமம், பழையபாலம் அண்ணாநகா். குமாரபாளையம் அமானி கலைமகள் வீதி, பரமத்திவேலூா் காசி விஸ்வநாதா் கோவில் அருகில், சோழசிராமணி அணை கீழ் பகுதியில் ஈஸ்வரன் கோவில் பின்புறம் மோகனூா் அசலதீபேஸ்வரா் கோவில் அருகில் உள்ள காவிரி ஆற்றங்கரை படித்துறை ஆகிய இடங்களிலும் விநாயகர் சிலைகளை கரைக்கலாம்.மேலும் தகவல்களுக்கு, மாவட்ட ஆட்சியா், காவல் துறை கண்காணிப்பாளா் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரைத் தொடா்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News