உள்ளூர் செய்திகள்

காந்திநகர் ஏ.வி.பி., பள்ளியில் புத்தக கண்காட்சி

Published On 2023-02-23 07:35 GMT   |   Update On 2023-02-23 07:35 GMT
  • 20000 க்கும் அதிகமான புத்தகங்களுடன் கூடிய அரங்குகள் அமைக் கப்பட்டு இருந்தது.
  • முதல்வர் பிரமோதனி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மோகனா, நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.

திருப்பூர் :

திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக்சீனியர் செகண்டரி பள்ளியில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் கதை, கட்டுரை, சிறுகதை, அறிவியல், பொதுஅறிவு, கலைக்களஞ்சியம், அகராதிகள், வாழ்க்கை வரலாறு, கணிதம், கணினிஅறிவியல், போட்டி தேர்வுகளுக்கு என பல்வேறு தலைப்புகளில் 20000 க்கும் அதிகமான புத்தகங்களுடன் கூடிய அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது.

கண்காட்சியை பார்வையிட்ட மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை பெற்றோருடன் வந்து வாங்கி சென்றனர்.

முன்னதாக ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி கண்காட்சியினை தொடங்கிவைத்து மாணவர்களிடையே புத்தகங்களுக்கு செய்யும் செலவினம், எதிர்கால வாழ்க்கைக்கான முதலீடு என்னும் கருத்தை வலியுறுத்திபேசினார்.இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் முதல்வர் பிரமோதனி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மோகனா, நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News