உள்ளூர் செய்திகள் (District)

நெல்லையப்பர் கோவில் முன்பு தேசிய கொடிக்கு மரியாதை செய்த காந்திமதி யானை

Published On 2023-08-15 09:10 GMT   |   Update On 2023-08-15 09:10 GMT
  • விக்டோரியா மகாராணி வழங்கிய விளக்குத்தூண் அருகே தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • கோவில் அர்ச்சகர்கள் தேசியக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை செய்தனர்.

நெல்லை:

சுதந்திர தினவிழாவையொட்டி தமிழகத்தில் இருக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஒரு சில கோவில்களில் மட்டும் கோவிலில் உள்ள பூஜை முறைப்படி தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். அதன்படி தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் சுதந்திர தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. சுவாமி நெல்லையப்பர் கோவில் முன்பு அமைந்துள்ள விக்டோரியா மகாராணி வழங்கிய விளக்குத்தூண் அருகே தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தேசிய கொடியை ஏற்றினார்.

அதனை தொடர்ந்து கோவில் யானை காந்திமதி தேசிய கொடிக்கு மரியாதை செய்தது.தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் தேசியக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை செய்தனர். தொடர்ந்து அங்கிருந்தவர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு இனிப்புகளும் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News