உள்ளூர் செய்திகள்

பவுர்ணமி யாகம் நடந்தது.

காருகுடி மகா மாரியம்மன் கோவிலில் பவுர்ணமி யாகம்

Published On 2023-04-07 08:48 GMT   |   Update On 2023-04-07 08:48 GMT
  • புனித நீர் அடங்கிய கலசம் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
  • வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை-கொளப்பாடு பிரதான சாலையில் காருகுடி கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சிறப்பு யாகம் நடைப்பெறுவது வழக்கம் போல் அதன்படி பங்குனி மாத பௌர்ணமியையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.

இதில் 108 வகையான மூலிகை திரவியங்களாலும், ஆல், அரசு, புரசு, வன்னி, நாயுருவி, வெள்ளெருக்குஉள்ளிட்ட மரப்பொருட்களும், 9 வகையான நவதானியங்கள், பழவர்க்கம் முதலியவற்றைக் கொண்டு யாகம் நடைப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு பின்னர் மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்க ப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News