உள்ளூர் செய்திகள்
ராமபக்த ஆஞ்சநேயருக்கு பவுர்ணமி வழிபாடு
- ராம பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கரந்தை பஸ் நிறுத்தம் அருகில் ஆதி பீமராஜகோஸ்வாமி மடம் அமைந்துள்ளது.
இங்கு ஆனி மாத பவுர்ணமி மற்றும் குரு பூர்ணிமாவை முன்னிட்டு ஆதி பீம ராஜகோஸ்வாமி ஜீவசமாதியில் அமைந்துள்ள ராம பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.