உள்ளூர் செய்திகள்

இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்த போது எடுத்தபடம்.

ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனையில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

Published On 2023-09-28 09:11 GMT   |   Update On 2023-09-28 09:11 GMT
  • உலக வெறி நாய் (ரேபிஸ்) தினத்தை முன்னிட்டு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இலவச வெறி நோய் (ரேபிஸ்) தடுப்பூசி முகாம் ஸ்ரீபுரம் கால்நடை பன்முக மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.
  • மாநகராட்சி சார்பில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்வாளர் முருகன் மற்றும் பணியாளர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி ஆகியோர் உத்தரவின்பேரின் உலக வெறி நாய் (ரேபிஸ்) தினத்தை முன்னிட்டு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இலவச வெறி நோய் (ரேபிஸ்) தடுப்பூசி முகாம் ஸ்ரீபுரம் கால்நடை பன்முக மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.

இதில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் தியோபலஸ் ரோஜர், துணை இயக்குனர் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு பணிகள் டாக்டர்.ராஜேந்திரன், கால்நடை மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மாநகராட்சி சார்பில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்வாளர் முருகன் மற்றும் பணியாளர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News