உள்ளூர் செய்திகள்

இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

Published On 2023-07-24 10:28 GMT   |   Update On 2023-07-24 10:28 GMT
  • இலவச மருத்துவ பரிசோ தனை முகாம் தர்மபுரி ஆயுதப்படை காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
  • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இலவச மருத்துவ பரிசோ தனை முகாம் தர்மபுரி ஆயுதப்படை காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

இந்த முகாமில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பார்வை மற்றும் இ.சி.ஜி. போன்ற மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் செல்வமணி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பழகன், ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், சக்திவேல் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News