உள்ளூர் செய்திகள்

காரமடையில் இலவச கண் சிகிச்சை முகாம்

Published On 2023-09-25 09:05 GMT   |   Update On 2023-09-25 09:05 GMT
  • சிறப்பு விருந்தினராக உதவி ஆளுநர் ஞானசேகரன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்
  • முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே காரமடை ரோட்டரி சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், காரமடை விநாயகர் வித்யாலயா சி.பி.எஸ்.சி பள்ளி ஆகியவை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம், காரமடை லாரி உரிமையாளர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

காரமடை ரோட்டரி சங்கத் தலைவர் விஜயபிரபு தலைமை தாங்கினார். செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தி னராக உதவி ஆளுநர் ஞான சேகரன் கலந்து கொண்டு முகாமை தொட ங்கி வைத்தார்.அரவிந்த் கண் மருத்துவ மனை டாக்டர்கள் அபி ப்ஷா, ஸ்ரீதா மற்றும் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.கார மடை லாரி உரிமையாளர் சங்க தலைவர் ரவிக்குமார், ரோட்டரி சங்க உறுப்பி னர்கள் கே.ஆர்.விக்னேஷ், சிவசதீஷ்குமார், சரவணன், ஜெயக்குமார், காமராஜ், கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News