உள்ளூர் செய்திகள்

கண் பரிசோதனை முகாம் நடந்தபோது எடுத்த படம்.

கயத்தாறு அருகே இலவச கண் பரிசோதனை முகாம்

Published On 2023-03-20 06:50 GMT   |   Update On 2023-03-20 06:50 GMT
  • இலந்தைகுளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மானங்காத்தான் கிராம சமுதாய நலக்கூடத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
  • தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் செல்வி ரவிக்குமார் முகாமை தொடங்கி வைத்தார்.

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மானங்காத்தான் கிராம சமுதாய நலக்கூடத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்லையா தலைமை தாங்கினார். தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் செல்வி ரவிக்குமார் முகாமை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் லட்சுமி, பண்டாரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை கண் ஒளி பரிசோதனையாளர் இசக்கி ராஜா மற்றும் மருத்துவ உதவியாளர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கிட்டப் பார்வை, தூரப்பார்வை மற்றும் கண்புரை போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் ஆத்திகுளம், ராமலிங்கபுரம், மானங்காத்தான், கம்மாபட்டி பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.

ஏற்பாடுகளை பஞ்சாயத்து அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News