உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்

Published On 2023-09-18 09:05 GMT   |   Update On 2023-09-18 09:05 GMT
  • தூத்துக்குடி தங்கம்மாள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • விழாவில் பள்ளியின் செயலாளர் ஜீவன் ஜேக்கப் மற்றும் ஆசிரியர்கள் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி தங்கம்மாள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முத்துக்குட்டி தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க செயலாளர் ஷிவ்ராஜ் மோகன், முன்னிலை வகித்தார். ஆசிரியர் செல்வமரகதம் வரவேற்றார்.

இதில் ஐஸ்வர்யம் கம்பி நிறுவனங்களின் சார்பில் 10 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை மேலாளர் உமயவேல் வழங்கினார். விழாவில் பள்ளியின் செயலாளர் ஜீவன் ஜேக்கப் மற்றும் ஆசிரியர்கள் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை உலகின் ஓளி அறக்கட்டளையை சேர்ந்த ஜான்சன் செய்திருந்தார். முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெபக்குமார் விக்டர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News