உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7.73 லட்சம் மோசடி

Published On 2023-05-10 14:43 IST   |   Update On 2023-05-10 14:43:00 IST
  • குறைந்த பணம் முதலீடு செய்த பிறகு, பகுதி நேர வேலைக்கான உயர் கமிஷனுடன் அதிக பணம் கிடைக்கும் என்று வந்தது.
  • நம்பிய சுரேஷ் பழனி ரூ.7லட்சத்து 73 ஆயிரத்தை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு செலுத்தியுள்ளார்

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ெதாட்டகிரி சாலை நரசிம்ம நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் பழனி. இவர் கெலமங்கலத்தில் உள்ள கிரானைட்ஸ் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது செல்போனில் உள்ள சமூக வலைதளங்களில் ஒன்றான டெலிகிராமுக்கு ஒரு குறுஞ்செய்தி கடந்த 16-ந் தேதி அன்று வந்தது. அதில் குறைந்த பணம் முதலீடு செய்த பிறகு, பகுதி நேர வேலைக்கான உயர் கமிஷனுடன் அதிக பணம் கிடைக்கும் என்று வந்தது. இதனை நம்பிய சுரேஷ் பழனி ரூ.7லட்சத்து 73 ஆயிரத்தை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு செலுத்தியுள்ளார். அதன்பின்னர் அவருக்கு குறுஞ்செய்தி வந்த எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் தன்னை மர்ம நபர்கள் ஏமாற்றியது தெரியவந்தது. இதுதொடர்பாக சுரேஷ் பழனி கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News