உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

நிலக்கோட்டை ஒன்றியத்தில் 100 நாள் பணியாளர்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் இல்லை

Published On 2023-10-14 12:27 IST   |   Update On 2023-10-14 12:27:00 IST
  • 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்றி வருபவர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்பட வில்லை.
  • சம்பளம் கேட்டு சென்றால் பணிதள பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் தகாத வார்ததைகளால் திட்டி அவமானப்படுத்துகின்றனர்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 மாதமாக வேலை செய்தும் சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்பட வில்லை.

மேலும் சம்பளம் கேட்டு சென்றால் பணிதள பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் தகாத வார்ததைகளால் திட்டி அவமானப்படுத்துகின்றனர். இதனால் அவர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து 100 நாள் வேலை பணியாளர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News