பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி
- உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமை தாங்கினார்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு உழவர் சந்தை விவசாய விற்பனை யாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி நடைபெற்றது.
பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமை தாங்கினார்.
காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்றார்.
பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன் மற்றும் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் செல்வம் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்வில் 30-க்கும் மேற்பட்ட உழவர் சந்தை விற்பனையாளர்கள் மற்றும் பாலக்கோடு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இந்துமதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகசுந்தரம், காரிமங்கலம் உதவி வேளாண்மை அலுவலர் சத்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் பாலக்கோடு உழவர் சந்தை நிர்வாக அலுவலர் செல்வம், நன்றி கூறினார்.