உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

போக்சோ சட்டத்தில் பூ வியாபாரி கைது

Published On 2022-08-19 05:19 GMT   |   Update On 2022-08-19 05:19 GMT
  • 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
  • பூ வியாபாரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே உள்ள மட்டப்பாறையைச் சேர்ந்த கணேசன் மகன் பாண்டியன் (வயது 24). பூ வியாபாரம் பார்த்து வருகிறார்.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, பூ வியாபாரி பாண்டியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.

Tags:    

Similar News