உள்ளூர் செய்திகள்

கடலுக்கு சென்ற மீனவர்கள்.

15 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்

Published On 2022-11-23 10:10 GMT   |   Update On 2022-11-23 10:10 GMT
  • கடந்த 7-ம் தேதி முதல் கடல் சீற்றமாக காணப்பட்டது.
  • 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

நாகப்பட்டினம்:

தென்கிழக்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதி காற்றழு த்த தாழ்வு மண்டலமாக உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த. இதையடுத்து கடந்த 7ம் தேதி முதல் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதையடுத்து மீன்வளத்துறை சார்பில் நாகப்பட்டினம் மீனவர்கள் ஆழ்கடல் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் புயல் சின்னம் வழுவிழந்ததை தொடர்ந்து15 நாட்களுக்குப் பிறகு நேற்று மீன்வளத்துறை மீனவர்கள் கடலில் மீன்பிடி க்க செல்லலாம் என்று அனுமதி வழங்கியது.இதைத் தொடர்ந்து இன்று அதிகாலைமுதல் நாகப்பட்டினம் மாவட்ட த்தில் உள்ள 700 விசைப்ப டகுகள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீன்பி டிக்க செல்லும் மீனவர்கள் அதிக அளவு மீன் கிடைக்கும் என நம்பிக்கையில் சென்று ள்ளனர்.இதை போன்று வேதார ண்யம் தாலுகாவை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க பிடிக்க சென்றுள்ளனர்.

Tags:    

Similar News