உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் மீனவர் தற்கொலை

Published On 2022-10-26 14:23 IST   |   Update On 2022-10-26 14:23:00 IST
  • தூத்துக்குடி சுனாமி காலனியை சேர்ந்தவர் கணேசன் மீனவர்
  • இவருக்கு சமீபகாலமாக உடல்நலம் குறைவு ஏற்பட்டுள்ளது

தூத்துக்குடி:

தூத்துக்குடி சுனாமி காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது 58). மீனவர். இவருக்கு திரும ணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளது.

இவருக்கு சமீபகாலமாக உடல்நலம் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு கணேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெர்மல் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News