உள்ளூர் செய்திகள்

பழவேற்காடு ஏரியில் சேற்றில் சிக்கி மீனவர் பலி

Published On 2022-08-16 06:33 GMT   |   Update On 2022-08-16 06:33 GMT
  • கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி குபேந்திரன் சாயு தண்ணீரில் மூழ்கினார்.
  • குபேந்திரன் சாயு உடல் பிணமாக கரை ஒதுங்கியது.

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த சின்ன மாங்காடு குப்பம் பகுதியை சேர்ந்தவர் துல்லா குட்டி (வயது 65). இவர் 12 பேருடன் படகில் சென்று பழவேற்காடு ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது வலையை இழுக்கும்போது சேற்றில் சிக்கி துல்லா குட்டி மூழ்கினார். அவரை மற்ற மீனவர்கள் மீட்டபோது அவர் ஏற்கனவே இறந்து இருப்பது தெரிந்தது.

நேபாள நாட்டை சேர்ந்தவர் குபேந்திரன் சாயு (வயது22). செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் பகுதியில உள்ள ஹாலோ பிளாக் (சிமெண்ட் செங்கல் தயாரிப்பு) கம்பெனியில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று மதியம் சாயு உடன் வேலை செய்யும் நண்பர்களுடன் மாமல்லபுரம் சுற்றுலா வந்தார்.

கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி குபேந்திரன் சாயு தண்ணீரில் மூழ்கினார். நண்பர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அதே பகுதியில் குபேந்திரன் சாயு உடல் பிணமாக கரை ஒதுங்கியது. இதையடுத்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News