உள்ளூர் செய்திகள்

தீ விபத்து: கார் உள்பட ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

Published On 2023-03-07 09:53 GMT   |   Update On 2023-03-07 09:53 GMT
  • சம்பத் (வயது 65). இவரது மனைவி நியாய விலை கடையில் பணிபுரிந்து வருகிறார்.
  • இரும்பாலை போலீசாரும் சூரமங்கலம் தீயணைப்பு வீரர்களும் வந்து தீயை போராடி அணைத்தனர்.

சேலம்:

சேலம் திருமலைகிரி பெரிய மாரியம்மன் கோவில் அருகில் வசித்து வருபவர் சம்பத் (வயது 65). இவரது மனைவி நியாய விலை கடையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று சம்பத் வீட்டை பூட்டிக் கொண்டு மனைவியுடன் வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மதியம் இவரது வீடு தீப்பற்றி எரிந்தது.

இரும்பாலை போலீசாரும் சூரமங்கலம் தீயணைப்பு வீரர்களும் வந்து தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் வீட்டிலிருந்த சொகுசு கார் மற்றும் குளிர்சாதன பெட்டி, டி.வி., மெத்தை, கம்ப்யூட்டர், பீரோ உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News