உள்ளூர் செய்திகள்

கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை.

அம்மன் சிலை கண்டெடுப்பு

Published On 2022-10-06 09:49 GMT   |   Update On 2022-10-06 09:49 GMT
  • குளத்தின் வட பகுதியில் மண்ணை தோண்டி எடுக்கும் போது கற்சிலை ஒன்று தென்பட்டது.
  • உயிரை கொடுத்து குழந்தையை காப்பாற்றும் பெண்களின் நினைவாக இது போன்ற சிலைகள் வைக்கப்படுவது வழக்கம்.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரில் உள்ள ருக்குமணி குளத்தில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் இரண்டு பொக்லைன் எந்திரங்கள் ஈடுபட்டு வருகின்றன. அப்போது குளத்தின் வட பகுதியில் மண்ணை தோன்றிய எடுக்கும் பொழுது கற்சிலை ஒன்று தென்பட்டது. அதனை பாதுகாப்பாக தொழிலாளர்கள் வெளியே எடுத்தனர்.

அம்மன் சிலை போன்று தோற்றமளித்த இந்த சிலையானது ஒரு பெண் தனது இடுப்பில் குழந்தையை தூக்கி வைத்திருப்பது போன்று இருந்தது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி தாசில்தார் ஜீவானந்தம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சிலையை கைப்பற்றி மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் எடுத்துச் சென்றனர்.

முந்தைய காலத்தில் தனது உயிரை கொடுத்து குழந்தையை காப்பாற்றும் பெண்களின் நினைவாக இது போன்ற சிலைகள் வைக்கப்படுவது வழக்கம் எனவும் இந்த சிலையும் அது போன்ற ஒரு சிலையாக இருக்கும் எனவும் பெரியோர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News