உள்ளூர் செய்திகள்

பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் வழிபட்டனர்.

வீரமகாசக்தி பத்திரகாளி அம்மன் கோவிலில் திருவிழா

Published On 2023-05-22 10:07 GMT   |   Update On 2023-05-22 10:07 GMT
  • குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து ஏராளமான பக்தர்கள் சக்திகரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
  • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பாபநாசம்:

பாபநாசம் அருகே அரயபுரம் கிராமத்தில் உள்ள வீரமகாசக்தி பத்திரகாளி அம்மன் கோவிலில் 12-ம் ஆண்டு திருவிழா கடந்த 17-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவை முன்னிட்டு நேற்று 108 சிவாலயம் குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து ஏராளமான பக்தர்கள் சக்திகரகம், திரிசூலம், அக்னி கொப்பரை, அரிவாள் எடுத்தும், பால்குடம், காவடி எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News