உள்ளூர் செய்திகள்

பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2022-12-29 15:00 IST   |   Update On 2022-12-29 15:00:00 IST
  • மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
  • இதில் மனமுடைந்து காணப்பட்ட யசோதா நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரபள்ளி அடுத்துள்ள சிந்துகும்மனபள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி யசோதா (வயது26). இவருக்கும், இவரது மாமியாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் மனமுடைந்து காணப்பட்ட யசோதா நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து குருபரபள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News