உள்ளூர் செய்திகள்

விஷஜந்து கடித்து பெண் தொழிலாளி சாவு

Published On 2023-05-26 09:22 GMT   |   Update On 2023-05-26 09:22 GMT
  • விஷஜந்து ஒன்று சரசம்மாவின் காலில் கடித்தது.
  • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சின்னஎலத்தகிரியை சேர்ந்தவர் அஞ்சப்பா (வயது60). இவரது மனைவி சரசம்மா (45). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது விஷஜந்து ஒன்று சரசம்மாவின் காலில் கடித்தது. இதனால் வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அஞ்சப்பா ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News