உள்ளூர் செய்திகள்
மரத்தில் இருந்து விழுந்த 7-ம் வகுப்பு மாணவன் சாவு
- தேங்காய் பறிப்பதற்காக மரத்தில் எறியுள்ளான்.
- மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சாந்தன் உயிரிழந்தான்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சரகம் பாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் திம்மராயசாமி. இவரது மகன் சாந்தன் (வயது 12). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 12-ந்தேதி அன்று தேங்காய் பறிப்பதற்காக மரத்தில் எறியுள்ளான். எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தான்.
இதில் படுகாயமடைந்த சாந்தனை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தன் உயிரிழந்தான். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.