உள்ளூர் செய்திகள்

தாசில்தார் கிருஷ்ணகுமாரியிடம் விவசாயிகள் மனு அளித்த காட்சி.




எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

Published On 2022-12-23 08:02 GMT   |   Update On 2022-12-23 08:02 GMT
  • கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தாசில்தார் கிருஷ்ணகுமாரி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே முத்துலாபுரம் குறுவட்டத்துக்கு உட்பட்ட மாசார்பட்டி மேலக்கரந்தை, அயன்ராஜாபட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மானாவாரி விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 2020-21-ம் ஆண்டு பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர் சேதமடைந்தது. இதற்குரிய பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் அய்யாதுரை தலைமையில் விவசாயிகள் எட்டயபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் தாசில்தார் கிருஷ்ணகுமாரி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், 2020-21-ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். பேச்சுவார்த்தையில், புதூர் வட்டார வேளாண்மை துணை அலுவலர் ராமன், உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் மகேஷ், நாகராஜ், சுப்புராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News