உள்ளூர் செய்திகள்

கட்டணமின்றி அங்ககச்சான்று பெற விவசாயிகளுக்கு அழைப்பு

Published On 2023-02-18 09:32 GMT   |   Update On 2023-02-18 09:32 GMT
  • இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாய குழுக்கள் உரிய கட்டணம் செலுத்தி தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தின் கீழ் பதிவு செய்து சான்று பெற்று வருகின்றனர்.
  • ஒரே ஊரில் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் குழு வாக இணைந்து பங்களிப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் பதிவு செய்து சான்று பெற்று பயன்பெறலாம்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத் துறை உதவி இயக்குநர் சித்திரைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாய குழுக்கள் உரிய கட்டணம் செலுத்தி தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தின் கீழ் பதிவு செய்து சான்று பெற்று வருகின்றனர்.

தற்போது, ஒரே கிராமத்தில் அல்லது அருகாமை யில் உள்ள கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் ஒரு குழுவாக அமைத்து எவ்வித கட்டணமும் இல்லாமல் பங்களிப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் அங்ககச்சான்று பெறலாம். இவ்வாறு சான்று பெற்ற பொருட்களை உள்நாட்டு அளவில் மட்டும் விற்பனை செய்யலாம்.

குறைந்தபட்சம் 10 விவசாயிகள் முதல் 50 விவ சாயிகள் வரை இணைந்து குழுவாக அமைத்து அங்கக முறைப்படி விவசாயம் செய்வோம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டு புகைப்படம் ஒட்டிய விண்ணப்பத்துடன் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் விவசாயிகள் உறுதிமொழிப் படிவம், பண்ணை விபரங்கள், ஆதார் நகல், சிட்டா ஆகியவற்றை மண்டல குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு குழுவிற்கு அங்கீகாரம் வழங்கப்படும். குழு உற்பத்தியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும்.

தனிப்பட்ட விவசாயிகள் இத்திட்டத்தில் சான்று பெற இயலாது. குழுவாக மட்டுமே பதிவு செய்ய முடியும். தவறான தகவல்கள் இருந்தால் குழு இடைநீக்கம் செய்யப்படும். குழுவில் யாரேனும் ஒரு விவசாயி அனுமதிக்கப்படாத இடு பொருள் பயன்படுத்தினால் அவர் குழுவில் இருந்து

நீக்கப்படுவார். இத்திட்டத்தில் கட்டணமின்றி எளிமையான முறையில் பதிவு செய்வதால் விவசாயி களுக்கு பயனுள்ளதாகவும், அதிகளவில் விவசாயிகள் அங்ககச்சான்று பெற முடியும்.

எனவே ஒரே ஊரில் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் குழு வாக இணைந்து பங்களிப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் பதிவு செய்து சான்று பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News