உள்ளூர் செய்திகள்

கலெக்டர் மகாபாரதி

விவசாயிகள் குறைதீர் கூட்டம் 22-ந்தேதி நடக்கிறது

Published On 2023-06-18 09:48 GMT   |   Update On 2023-06-18 09:48 GMT
  • காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
  • முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொள்ளவும்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப தாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த (ஜூன்) மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் வருகிற 22-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு வேளாண்மை, நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தோட்டக்கலை துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்க லாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News