உள்ளூர் செய்திகள்

தண்ணீர் இல்லாத தாங்கைகுளம்.

உடன்குடி பகுதியில் குளங்களில் தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் கவலை

Published On 2023-01-31 09:18 GMT   |   Update On 2023-01-31 09:18 GMT
  • கடந்தாண்டு உடன்குடி வட்டார பகுதியில் அனைத்து குளங்களும் முழுமையாக நிறைந்தது.
  • குளம் குட்டைகளுக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

உடன்குடி:

உடன்குடி வட்டார பகுதியில் கடந்தாண்டு புதியதாக உருவாக்கப்பட்ட 10 குளங்கள்மற்றும் வழக்கமான குளங்கள் எல்லாம் முழுமையாக நிறைந்து கடலுக்கு கருமேனி ஆறு வழியாக தண்ணீர்சென்றது.

இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இதைப்போல இந்த ஆண்டும் பருவமழை வரும், குளம், குட்டைகள் எல்லாம் நிரம்பும், விவசாய நிலங்கள் எல்லாம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையில் விவசாயத்தை விறுவிறுப்பாக தொடங்கி விவசாய பணிகளை செய்தார்கள். ஆனால் மழையும் வரவில்லை, குளம் குட்டைகளுக்கு தண்ணீர் வரவும் இல்லை, இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இனியும் மழை வருமா? விவசாய நிலங்களில் கடல் நீர் மட்டம் ஊடுருவி தண்ணீர் எல்லாம் உப்பாக மாறிவிடுமோ? விவசாய பயிர்கள் காப்பாற்றப்படுமா? என்று கவலையில் உள்ளனர்.

Tags:    

Similar News