உள்ளூர் செய்திகள்

வீரவநல்லூரில் விவசாயி தற்கொலை

Published On 2022-07-10 09:00 GMT   |   Update On 2022-07-10 09:00 GMT
  • சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சஞ்சய் காந்தி விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
  • வீரநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

வீரவநல்லூர் நயினார் காலனி களத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் சஞ்சய் காந்தி(வயது 40). விவசாயி. இவரது மனைவி அம்பிகா(38). சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சஞ்சய் காந்தி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் நேற்று இறந்துவிட்டார்.

இதுதொடர்பாக வீரநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சஞ்சய் காந்தி தனது வயலில் வாழை பயிரிட்டுள்ளார். அதற்கு வரப்பு வெட்டுவது சம்பந்தமான வேலைக்கு தனது மனைவியை அழைத்துள்ளார்.

ஆனால் அவர் வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவிரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News