உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

ஒட்டன்சத்திரம் அருகே கள்ளக்காதல் பிரச்சினையில் விவசாயி அடித்துக்கொலை

Published On 2022-12-24 06:37 GMT   |   Update On 2022-12-24 06:37 GMT
  • கள்ளக்காதலை கண்டித்ததால் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டார்.
  • இதுகுறித்து இடையகோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து ஒருவரை கைது செய்தனர்.

சத்திரப்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள இடைய கோட்டை ஊராட்சிக்குட்பட்ட கருமாநாயக்கனூரை சேர்ந்தவர் வையப்பன்(50) இவர் அதேபகுதிைய சேர்ந்த முத்துலட்சுமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்து அங்கேயே தங்கி வந்தார். அப்போது முத்து லட்சுமிக்கும், வையப்ப னுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இதனை முத்துலட்சுமி யின் சம்பந்தியான சக்திவேல் என்பவர் கண்டித்துள்ளார். இருந்தபோதும் வையப்பன் முத்துலட்சுமியுடன் தொடர்ந்து பழகி வந்தார். நேற்று வீட்டிற்குள் தூங்கிகொண்டிருந்த வையப்பனை சக்திவேல் சுத்தியால் சரமாரியாக தாக்கினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனே முத்துலட்சுமி அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி ச்சென்றார். ஆனால் வழியி லேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இடையகோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

Tags:    

Similar News