உள்ளூர் செய்திகள் (District)

புவனகிரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

Published On 2023-10-26 08:56 GMT   |   Update On 2023-10-26 08:56 GMT
  • சீயப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி எதிர்பாராத விதமாக வீரப்பன் மீது மோதினார்.
  • பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கடலூர்:

புவனகிரி அருகே பு. உடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன்(வயது70) விவசாயி. இவர் சாலை ஓரம் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி சென்று கொண்டிருந்தபோது பின்புறமாக மோட்டர் சைக்கிள் வந்த சீயப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி எதிர்பாராத விதமாக வீரப்பன் மீது மோதினார். இதில் அவர் தூக்கி எறிய ப்பட்டு படுகாயம் அடைந்தார். அவ்வழியே சென்றவர்கள் இவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News