உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே விவசாயி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-04-27 08:21 GMT   |   Update On 2023-04-27 08:21 GMT
  • இந்திராவுக்கும் அதே ஊரை சேர்ந்த ஒருவருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
  • கடிதம் எழுதி வைத்துவிட்டு கோதண்டபாணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்தமுடப்பள்ளி சேர்ந்த வர் கோதண்டபாணி (55). விவசாயி இவரது மனைவி இந்திரா. இந்திராவுக்கும் அதே ஊரை சேர்ந்த ஒருவருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கோதண்ட பாணி கண்டித்துள்ளார்.இதனால் கணவன் மனைவிக்குள் தகராறு இருந்து வந்தது. இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு அதே பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் கோதண்டபாணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் ராஜதாமரைபாண்டியன், முத்தாண்டிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியபாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News