உள்ளூர் செய்திகள்
- பின்பகுதியில் இருந்து வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று இவரது சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
- தூக்கி வீசப்பட்ட சுருட்டையன் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டவர்த்தி கிராமத்தைச் சார்ந்தவர் சுருட்டையன் (வயது 55). இவர் சைக்கிளில் தோட்ட த்தில் இருந்து வட்டவர்த்தி கிராமத்தில் உள்ள தன் வீட்டிற்கு சாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது பின்பகுதியில் இருந்து வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று இவரது சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சுருட்டையன் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாப்பிரெ ட்டிப்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தியவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.