உள்ளூர் செய்திகள்
- மெலட்டூரில் இருந்து நரியனூர் வந்த கார் குமாரசாமி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அருகே உள்ள ஏர்வாடி கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 40), விவசாயி, இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் அன்னப்பன்பேட்டையில் இருந்து மெலட்டூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
நரியனூர் அருகே வந்தபோது எதிரே மெலட்டூரில் இருந்து நரியனூர் நோக்கி சென்ற கார் குமாரசாமி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த நிலையில் கிடந்த குமாரசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே குமாரசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மெலட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.