உள்ளூர் செய்திகள்
விழுப்புரத்தில் தூக்குபோட்டு விவசாயி தற்கொலை
- சர்க்கரை வியாதி இருந்துள்ளதால் அவதிப்பட்டு வந்தார் .
- மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் ஹரிபாபு(46) விவசாயி, மது அருந்தும் பழக்கமுடைய இவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை வியாதி இருந்துள்ளதால் அவதிப்பட்டு வந்தார் இதனால் விரக்தியில் இருந்த அவர் நேற்று வீட்டில் ஆளில்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி விஜயா கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் டவுன் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.