உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2023-07-08 07:12 GMT   |   Update On 2023-07-08 07:12 GMT
  • பாண்டியனுக்கும் வாஞ்சிநாதனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
  • பாண்டியன் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் அருகே செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது68) விவசாயி. இவருக்கும், இவரது மகன் வாஞ்சிநாதன்(39) என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பாண்டியன் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பாண்டியன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து சங்கராபுரம் சிறப்பு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

Similar News