உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-10-02 09:31 GMT   |   Update On 2023-10-02 09:31 GMT
  • பெரியசாமிக்கும் பூர்வீக விவசாய நிலத்தை பாகப்பிரிவினை செய்வதில் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது
  • இந்த நிலையில் காட்டனந்தல் ஏரிக்கரையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி. இவருடைய கணவர் செல்லப்பா (வயது 50). இவருக்கும் இவருடைய தம்பி பெரியசாமிக்கும் பூர்வீக விவசாய நிலத்தை பாகப்பிரிவினை செய்வதில் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நிலத்தை பாகப்பிரிவினை செய்யாமல் இருப்பதால் செல்லப்பா சரியாக சாப்பிடாமல், மன உளைச்சலிலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காட்டனந்தல் ஏரிக்கரையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் செல்லப்பாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து செல்லப்பாவின் மனைவி கொளஞ்சி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News