உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் பிரபல ரவுடி கைது

Published On 2022-10-14 09:18 GMT   |   Update On 2022-10-14 09:18 GMT
  • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது தாளமுத்துநகர் மெயின்ரோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.
  • இவர் மீது கொலை வழக்கு உள்பட 17 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி தாளமுத்து நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது தாளமுத்துநகர் மெயின்ரோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அவர் கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக்குளம், அகஸ்தேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த செல்வமுருகன் என்ற செல்வம் (வயது 34) என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செல்வம் மீது ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தாளமுத்துநகர், திருச்செந்தூர் ஆகிய காவல் நிலையங்களில் கொலை வழக்கு உட்பட 4 வழக்குகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நேசமணிநகர், தெற்கு தாமரைக்குளம், ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், மெஞ்ஞானபுரம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உட்பட 10 வழக்குகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், வேலூர் மாவட்டத்தில் வேலூர் கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் மற்றும் கோவை மாவட்டத்தில் ஆனைமலை காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு என மொத்தம் 17 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News